Skip to main content

Posts

ச.அர்ஜூன்ராச்

நாக்கின் மேல் பல்லை போட்டு பேசாதிருத்தல்

பத்து கவிதைகள்  1   இறங்கி வருதல்  ஒரு கலை ___________________  முதலில்   யாரும் கூப்பிடாதவனிலிருந்து இறங்கி வந்தேன் இப்பொழுது பணிவு  என் தோள்களுக்கு  கை வந்த கலை   0o0   2   அது காதலில்லை யாரையும் நேசிக்கும்  தூய கண்கள்    அதை  அதை என மருகும் வணக்கத்தின் சாக்கில்  கும்பிட்டேன் .   0o0       3 எவ்வளவு சாவகாசமாக  ஒரு சிகரெட் முடிந்துவிடுகிறதோ  அவ்வளவு அவசரமாக  ஒரு சிகரெட் முடிந்துவிடுகிறது  மேலும் சிகரெட்டைப் பற்றி உனக்கென்ன தெரியும்? அது  உங்கப்பன் விசிலை கேட்டவன். 0o0     4 மனதில் இரண்டு குரல்கள். ஒன்று,   நன்றாக  கனத்த ஒலிப்பில்  தட்டி எழுப்பி  அழுத்தமான எச்சரிக்கையோடு சொன்னது  "இங்கிட்டு வேணா நாம அங்கிட்டு போவோம் "  அடுத்த நொடியே திரும்ப ஒரு குரல்   இது முதல் குரலை மழுங்கடிக்கச்செய்யும் இன்னொரு குரல் ஒரு டீசன்டுக்காக நான் இரண்டாவதுக்குச் செவி சாய்த்தேன்  கடைநிலை ஊழியனென கீழ்படிந்து.  0o0   ...

Latest Posts

"காளியும் ஒரு லெளகீகன்"